
மொழி எனும் கருவறையில்
 மூத்த பிள்ளையாய் பிறந்த 
 தமிழ் மொழியே ! 
 
 மூத்த குடியாம் எங்கள் 
 முன்னோர்களின் வாய் திறந்து 
 பேச வைத்த முதல் 
 மொழியே ! 
 
 அறியாமை எனும் இருள் 
 அகற்றி அறியொளி சுடரை 
 ஏற்றி வைத்து 
 கம்பன், வள்ளுவன் போன்ற 
 சான்றோர்களை அறிமுகப்படுத்திய 
 உன்னத மொழியே ! 
 
 மேன்மை பொருந்திய பல 
 மேலை நாட்டு அறிஞர்களை 
 வியக்க வைத்த சரித்திர 
 மொழியே ! 
 
 பல நூற்றாண்டுகள் கடந்து வந்தாலும் 
 பழமை மாறாது மதுரமாய் இனிக்கும் 
 பன்மை மொழியே ! 
 ஆயிரம் தடை வந்தாலும் 
 அழிவில்லை அன்னையே உனக்கு வாழ்க ! வாழ்க ! வாழ்க ! வாழ்கவே