நிகழ்ச்சிகள்

Event Details

திருக்குறள் விழா 2020
கீழ்/மேல் உயர்நிலைப் (Lower/Upper Secondary) பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

நுழைவு : அனுமதி இலவசம்...!
நாள் : 27-12-2020
நேரம் : 6 PM to 9 PM
இடம் : இணையதளம் (Internet)

தமிழ்மொழி பண்பாட்டு கழகம், சிங்கப்பூர்

அன்பு மாணவர்களே! பெற்றோரே!

தங்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் இம்மாதம் தொடங்கி, வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மாலை 6மணிக்குத் தனது ஔவையார் விழா, திருக்குறள் விழா, பாரதியார் விழா ஆகிய மூன்று விழாக்களை உள்ளடக்கிய முக்கவி விழாவை ஏற்பாடு செய்து நடத்தவிருக்கிறது. மூன்று விழாக்கள் தொடர்பான போட்டிகளை இணையம் வழியே நடத்த விரும்புகிறது. அப்போட்டிகள் பாலர் பள்ளி முதல் புகுமுக வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றன. இங்கு திருக்குறள் விழாப் போட்டிகள் பற்றிய விரிவான விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அறியுமாறும் ஆதரவு தெரிவிக்குமாறும் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து போட்டிகளுக்கான தொடர்பு அதிகாரி திருமதி சுகுணாவுடன் +65 9029 1535 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது mukkavisec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வழியே தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

போட்டிகளுக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குமாறு கழகம் வேண்டிக்கொள்கிறது. இப்போது போட்டிகள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

1. திருக்குறள் விழா - போட்டிகள் :

திருக்குறள் விழாப்போட்டிகளை உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்துவது பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகிறோம். அவ்வகையில் பதின்ம வயது மாணவர்கள் தொடர்பான கருக்களில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து அதை ஒரு திருக்குறளை மையமாக வைத்து மாணவர்கள் இருவர் உரையாடல் நடத்தும்வகையில் போட்டியை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

கீழ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டி:

“பதின்ம வயதின் ஆரம்பத்தில் நாம்” - இணையாக உரையாடும் போட்டி

ஒவ்வொரு பள்ளியிலும் கீழ் உயர்நிலை வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தங்களது படைப்புகளை உரையாடலாகப் பேச்சுத்தமிழில் வழங்க வேண்டும். பதின்ம வயதின் ஆரம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவர்கள் அவ்வயது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட தலைப்பில் இடம்பெறும் அந்த உரையாடலில் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றில் இடம்பெறும் திருக்குறள்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம். இங்கு விரிவான முறையில் 4 முதல் 5 நிமிடங்களுக்கு அவர்களது உரையாடல் இடம் பெறலாம். ஒரு குழுவில் உள்ள இருவரும் இணைந்து ஒரு பதிவுத்தாளை மட்டும் அனுப்ப வேண்டும்.

மேல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டி:

“பதின்மவயதும் நாமும்” - இணையாக உரையாடும் போட்டி

ஒவ்வொரு பள்ளியிலும் மேல் உயர்நிலை வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தங்களது படைப்புகளை உரையாடலாகப் பேச்சுத்தமிழில் வழங்க வேண்டும். பதின்மவயதின் ஒரு பகுதியைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அதில் பயணம் செய்துகொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் பதின்மவயதுப் பயணம் தொடர்பான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் இடம்பெறும் அந்த உரையாடலில் அறத்துப்பால், பொருட்பால் தொடர்பான திருக்குறள்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம். இங்கு விரிவான முறையில் 5 முதல் 6 நிமிடங்களுக்கு அவர்களது உரையாடல் இடம் பெறலாம். ஒரு குழுவில் உள்ள இருவரும் இணைந்து ஒரு பதிவுத்தாளை மட்டும் அனுப்ப வேண்டும்.

  • ஒவ்வோர் இணையினரும் தங்கள் பதிவை இணையப்பக்கத்தில் ஒரே நேரத்தில் செய்தல் வேண்டும்.
  • உங்கள் படைப்புகளை உரிய நாளுக்குள் தயவு செய்து அனுப்பிவிடவும்.
  • தேர்வுகள் முடிந்து விடுமுறைக்காலத்தில் மாணவர்கள் சிறப்பாகச் செய்ய இயலும் என்ற நோக்கில்தான் இந்தப் போட்டிகள் இப்போது நடத்தப்படுகின்றன. இது குறித்த தங்களின் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
  • போட்டிக்கு வரும் படைப்புகளில் தமிழ்மொழியின் பயன்பாடு, நல்ல சரளம், குரல் ஏற்ற இறக்கம், பொருத்தமான உணர்வு வெளிப்பாடு ஆகியன கவனத்தில் கொள்ளப்படும்.
  • பேச்சுத்தமிழுடன் தொடர்புடைய போட்டிகளில் பேச்சுத்தமிழைத் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்தும் பாங்கு கவனிக்கப்படும்.
  • உங்கள் படைப்புகளை இணையத்தில் வேறு எந்தப் போட்டிக்கும் அனுப்பியிருக்கக்கூடாது.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
  • இது குறித்துக் கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி சுகுணாவுடன் பின்வரும் mukkavisec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது +65 9029 1535 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
  • உங்களது விண்ணப்பங்களை விரைவில் பின்வரும் இணையப்பக்கத்தில் உள்ள https://www.tamilmozhi.org/ போட்டிகள் குறித்த பின்வரும் இணைப்புகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த இணைப்புகள் வருமாறு.
  • கீழ் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் - https://form.jotform.com/203317871992463
  • மேல் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் - https://form.jotform.com/203318455402448
  • முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற நிலையில், போட்டியில் 25 இணையினர்வரை தங்கள் பதிவுத்தாள்களை அனுப்பிவைக்கலாம். அதற்குப் பிறகு வரும் பதிவுத்தாள்களை இணையப்பக்கம் ஏற்றுக்கொள்ளாது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
  • போட்டிகளுக்கான படைப்புகள் எங்களை வந்து சேரவேண்டிய இறுதிநாள் 18 டிசம்பர் 2020 இரவு 11.59மணி. அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.

மிக்க நன்றி, வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்

தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

சிங்கப்பூர்.


குறிப்பு:

போட்டிகளுக்கான பதிவுத்தாள் விவரங்களைத் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் இணையப்பக்கத்தில்https://www.tamilmozhi.org/ பெறுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

கீழ் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் - https://form.jotform.com/203317871992463

மேல் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் - https://form.jotform.com/203318455402448

slot deposit pulsa slot Thailand slot dana slot deposit pulsa slot thailand slot pulsa slot dana slot dana slot dana slot777 slot deposit pulsa slot dana slot gacor