நிகழ்ச்சிகள்

Event Details

ஔவையார் விழா - போட்டிகள் 2023
பாலர், தொடக்க நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் போட்டிகள்

நுழைவு : அனுமதி இலவசம்...!
நாள் : 06-08-2023
நேரம் : 9 AM to 6 PM
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
பாலர் பள்ளியில் மழலையர் வகுப்பு 1, மழலையர் வகுப்பு 2 பயிலும் மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி பாலர் பள்ளியில் பாலர் வகுப்பு 1 - இல் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி பாலர் பள்ளியில் பாலர் வகுப்பு 2 - இல் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி தொடக்கப்பள்ளி வகுப்பு 1 பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி தொடக்கப்பள்ளி வகுப்பு 2 பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி தொடக்கப்பள்ளி வகுப்பு 3 பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி தொடக்கப்பள்ளி வகுப்பு 4 பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி தொடக்கப்பள்ளி வகுப்பு 5, 6 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்துஒப்பிக்கும் போட்டி மற்றும் காஹூட் (Kahoot) உயர்நிலைப்பள்ளி 1, 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் படம் வரைந்து வண்ணம் தீட்டும் போட்டி உயர்நிலைப்பள்ளி 3, 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான இரண்டு சுற்று கொண்ட கட்டுரை எழுதும் போட்டி மற்றும் காஹூட் (Kahoot) போட்டி

பாலர் பள்ளியில் மழலையர் வகுப்பு 1, மழலையர் வகுப்பு 2 பயிலும் மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி
bha1
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக் கிழமை, 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/231734913100445
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 06 ஆகஸ்ட் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி: வண்ணம் தீட்டும் போட்டி

இப்போட்டியில் பாலர் பள்ளியில் மழலையர் வகுப்பு 1, மழலையர் வகுப்பு 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

மாணவர்கள் தங்களுக்குத் தரப்படும் ஔவையார் படத்திற்கு அவர்கள் விரும்பும் வகையில் வண்ணம் தீட்டுதல் போட்டியில் பங்கேற்பார்கள். போட்டிக்குத் தேவையான வண்ணப் பென்சில்கள், அழிப்பான்கள் (Eraser) போன்ற பொருள்களை அவர்கள் தாமே கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொருத்தமான முறையில் வண்ணங்களைப் பயன்படுத்துதல், பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் ஒட்டுமொத்தப் படமும் வண்ணம் தீட்டப்பட்டிருத்தல் போன்றவை மதிப்பீட்டின் போது கவனத்தில் கொள்ளப்படும். வண்ணம் தீட்டப்பட்ட படங்களைத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தனது பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் என்பது இங்கு குறிப்பிடப்படுகிறது.

வண்ணம் தீட்டுதலுக்கான நேரம் ஒரு மணிநேரம்

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளி 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • வண்ணம் தீட்டுதலுக்கான அதிகபட்ச நேரம் அறுபது(60) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
  • போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி கோவிந்தராஜூ சுமதி (Mrs Govindaraju Sumathy) அவர்களைத் தொலைபேசி எண்  +65 9106 2232 இலும் திருமதி அழகு தெய்வானை (Mrs Alagu Theivanai) அவர்களைத் தொலைபேசி எண் +65 9183 4161 இலும், avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி. வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிங்கப்பூர்


பாலர் பள்ளியில் பாலர் வகுப்பு 1 - இல் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக் கிழமை, 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/231735905277462
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 06 ஆகஸ்ட் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி: தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி

இப்போட்டியில் பாலர் பள்ளியில் பாலர் வகுப்பு 1 - இல் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்ட ஆத்திசூடிப் பாடல்வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 3 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

ஔவையாரின் ஆத்திசூடி

(குறிப்பு: பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)

பாலர் வகுப்பு ஒன்று (1 முதல் 10 ஆத்திசூடிப்பாடல்கள்)

1. அறம் செய விரும்பு
(நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.)

2. ஆறுவது சினம்
(கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.)

3. இயல்வது கரவேல்
(உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.)

4. ஈவது விலக்கேல்
(ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.)

5. உடையது விளம்பேல்
(உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.)

6. ஊக்கமது கைவிடேல்
(எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது.)

7. எண் எழுத்து இகழேல்
(கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.)

8. ஏற்பது இகழ்ச்சி
(இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.)

9. ஐயம் இட்டு உண்
(யாசிப்பவர்கட்குப் பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.)

10. ஒப்புரவு ஒழுகு
(உலக நடையை அறிந்து கொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்து கொள்.)

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளி 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பாடல்களை ஒப்பிப்பதற்கு அதிகபட்ச நேரம் மூன்று(3) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
  • போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி கோவிந்தராஜூ சுமதி (Mrs Govindaraju Sumathy) அவர்களைத் தொலைபேசி எண்  +65 9106 2232 இலும் திருமதி அழகு தெய்வானை (Mrs Alagu Theivanai) அவர்களைத் தொலைபேசி எண் +65 9183 4161 இலும், avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி. வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிங்கப்பூர்


பாலர் பள்ளியில் பாலர் வகுப்பு 2 - இல் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக் கிழமை, 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/231735421829458
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 06 ஆகஸ்ட் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி: தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி

இப்போட்டியில் பாலர் பள்ளியில் பாலர் வகுப்பு 2 - இல் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்ட ஆத்திசூடிப் பாடல்வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 3 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

ஔவையாரின் ஆத்திசூடி

(குறிப்பு: பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)

பாலர் வகுப்பு இரண்டு (1 முதல் 15 ஆத்திசூடிப்பாடல்கள்)

1. அறம் செய விரும்பு
(நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.)

2. ஆறுவது சினம்
(கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.)

3. இயல்வது கரவேல்
(உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.)

4. ஈவது விலக்கேல்
(ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.)

5. உடையது விளம்பேல்
(உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.)

6. ஊக்கமது கைவிடேல்
(எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது.)

7. எண் எழுத்து இகழேல்
(கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.)

8. ஏற்பது இகழ்ச்சி
(இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.)

9. ஐயம் இட்டு உண்
(யாசிப்பவர்கட்குப் பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.)

10. ஒப்புரவு ஒழுகு
(உலக நடையை அறிந்து கொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்து கொள்.)

11. ஓதுவது ஒழியேல்
(நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக் கொண்டிரு.)

12. ஔவியம் பேசேல்
(ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.)

13. அஃகஞ் சுருக்கேல்
(அதிக இலாபத்துக்காக, தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.)

14. கண்டொன்று சொல்லேல்
(கண்ணாற் கண்டதற்கு மாறாக(பொய் சாட்சி)ச் சொல்லாதே.)

15. ஙப் போல் வளை
('ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயனுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம்.)

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளி 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பாடல்களை ஒப்பிப்பதற்கு அதிகபட்ச நேரம் மூன்று(3) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
  • போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி கோவிந்தராஜூ சுமதி (Mrs Govindaraju Sumathy) அவர்களைத் தொலைபேசி எண்  +65 9106 2232 இலும் திருமதி அழகு தெய்வானை (Mrs Alagu Theivanai) அவர்களைத் தொலைபேசி எண் +65 9183 4161 இலும், avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி. வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிங்கப்பூர்


தொடக்கப்பள்ளி வகுப்பு 1 பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக் கிழமை, 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/231735897996480
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 06 ஆகஸ்ட் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி : தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி

இப்போட்டியில் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை 1 பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

மாணவர்கள் அவர்களது வகுப்புக்கு ஏற்ப, பின்வரும் பகுதியில் தரப்பட்ட ஆத்திசூடிப் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

ஔவையாரின் ஆத்திசூடி

(குறிப்பு: பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)

தொடக்கநிலை வகுப்பு ஒன்று (1 முதல் 40 ஆத்திசூடிப்பாடல்கள்)

1. அறம் செய விரும்பு
(நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.)

2. ஆறுவது சினம்
(கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.)

3. இயல்வது கரவேல்
(உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.)

4. ஈவது விலக்கேல்
(ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.)

5. உடையது விளம்பேல்
(உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.)

6. ஊக்கமது கைவிடேல்
(எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது.)

7. எண் எழுத்து இகழேல்
(கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.)

8. ஏற்பது இகழ்ச்சி
(இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.)

9. ஐயம் இட்டு உண்
(யாசிப்பவர்கட்குப் பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.)

10. ஒப்புரவு ஒழுகு
(உலக நடையை அறிந்து கொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்து கொள்.)

11. ஓதுவது ஒழியேல்
(நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக் கொண்டிரு.)

12. ஔவியம் பேசேல்
(ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.)

13. அஃகஞ் சுருக்கேல்
(அதிக இலாபத்துக்காக, தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.)

14. கண்டொன்று சொல்லேல்
(கண்ணாற் கண்டதற்கு மாறாக(பொய் சாட்சி)ச் சொல்லாதே.)

15. ஙப் போல் வளை
('ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயனுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம்.)

16. சனி நீராடு
(சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.)

17. ஞயம்பட உரை
(கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.)

18. இடம்பட வீடு எடேல்
(உன் தேவைக்கு மேல் வீட்டைப் பெரிதாகக் கட்டாதே.)

19. இணக்கம் அறிந்து இணங்கு
(ஒருவரிடம் நட்புக் கொள்ளும் முன், அவர் நல்ல குணங்களும், நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்புக் கொள்ளவும்.)

20. தந்தை தாய்ப் பேண்
(உன் தந்தையையும், தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.)

21. நன்றி மறவேல்
(ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.)

22. பருவத்தே பயிர் செய்
(எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.)

23. மண் பறித்து உண்ணேல்
(பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்காதே என்றும் பொருள் கொள்ளலாம்.)

24. இயல்பு அலாதன செய்யேல்
(நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.)

25. அரவம் ஆட்டேல்
(பாம்புகளைப் பிடித்து விளையாடாதே.)

26. இலவம் பஞ்சில் துயில்
(இலவம் பஞ்சு எனும் ஒரு வகைப் பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.)

27. வஞ்சகம் பேசேல்
(உண்மைக்குப் புறம்பான, கவர்ச்சிகரமான) சொற்களைப் பேசாதே.)

28. அழகு அலாதன செய்யேல்
(இழிவான செயல்களைச் செய்யாதே)

29. இளமையில் கல்
(இளமைப் பருவத்தில் இருந்தே கற்க வேண்டியவற்றை(இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக் கொள்.)

30. அறனை மறவேல்
(தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.)

31. அனந்தல் ஆடேல்
(மிகுதியாகத் துங்காதே.)

32. கடிவது மற
(யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.)

33. காப்பது விரதம்
(தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்(அல்லது) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.)

34. கிழமை பட வாழ்
(உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்.)

35. கீழ்மை யகற்று
(இழிவான குணஞ் செயல்களை நீக்கு.)

36. குணமது கைவிடேல்
(நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்தி விடாதே(கைவிடேல்).)

37. கூடிப் பிரியேல்
(நல்லவரோடு நட்புடன் பழகிப் பின்பு அவரைப் பிரியாதே)

38. கெடுப்ப தொழி
(பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.)

39. கேள்வி முயல்
(கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்.)

40. கைவினை கரவேல்
(உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.)

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளி 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பாடல்களை ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் ஐந்து(5) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
  • போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி கோவிந்தராஜூ சுமதி (Mrs Govindaraju Sumathy) அவர்களைத் தொலைபேசி எண்  +65 9106 2232 இலும் திருமதி அழகு தெய்வானை (Mrs Alagu Theivanai) அவர்களைத் தொலைபேசி எண் +65 9183 4161 இலும், avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி. வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிங்கப்பூர்


தொடக்கப்பள்ளி வகுப்பு 2 பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக் கிழமை, 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/231735533946462
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 06 ஆகஸ்ட் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி : தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி

இப்போட்டியில் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை 2 பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

மாணவர்கள் அவர்களது வகுப்புக்கு ஏற்ப, பின்வரும் பகுதியில் தரப்பட்ட ஆத்திசூடிப் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

ஔவையாரின் ஆத்திசூடி

(குறிப்பு: பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)

தொடக்கநிலை வகுப்பு இரண்டு (1 முதல் 50 ஆத்திசூடிப்பாடல்கள்)

1. அறம் செய விரும்பு
(நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.)

2. ஆறுவது சினம்
(கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.)

3. இயல்வது கரவேல்
(உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.)

4. ஈவது விலக்கேல்
(ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.)

5. உடையது விளம்பேல்
(உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.)

6. ஊக்கமது கைவிடேல்
(எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது.)

7. எண் எழுத்து இகழேல்
(கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.)

8. ஏற்பது இகழ்ச்சி
(இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.)

9. ஐயம் இட்டு உண்
(யாசிப்பவர்கட்குப் பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.)

10. ஒப்புரவு ஒழுகு
(உலக நடையை அறிந்து கொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்து கொள்.)

11. ஓதுவது ஒழியேல்
(நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக் கொண்டிரு.)

12. ஔவியம் பேசேல்
(ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.)

13. அஃகஞ் சுருக்கேல்
(அதிக இலாபத்துக்காக, தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.)

14. கண்டொன்று சொல்லேல்
(கண்ணாற் கண்டதற்கு மாறாக(பொய் சாட்சி)ச் சொல்லாதே.)

15. ஙப் போல் வளை
('ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயனுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம்.)

16. சனி நீராடு
(சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.)

17. ஞயம்பட உரை
(கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.)

18. இடம்பட வீடு எடேல்
(உன் தேவைக்கு மேல் வீட்டைப் பெரிதாகக் கட்டாதே.)

19. இணக்கம் அறிந்து இணங்கு
(ஒருவரிடம் நட்புக் கொள்ளும் முன், அவர் நல்ல குணங்களும், நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்புக் கொள்ளவும்.)

20. தந்தை தாய்ப் பேண்
(உன் தந்தையையும், தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.)

21. நன்றி மறவேல்
(ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.)

22. பருவத்தே பயிர் செய்
(எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.)

23. மண் பறித்து உண்ணேல்
(பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்காதே என்றும் பொருள் கொள்ளலாம்.)

24. இயல்பு அலாதன செய்யேல்
(நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.)

25. அரவம் ஆட்டேல்
(பாம்புகளைப் பிடித்து விளையாடாதே.)

26. இலவம் பஞ்சில் துயில்
(இலவம் பஞ்சு எனும் ஒரு வகைப் பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.)

27. வஞ்சகம் பேசேல்
(உண்மைக்குப் புறம்பான, கவர்ச்சிகரமான) சொற்களைப் பேசாதே.)

28. அழகு அலாதன செய்யேல்
(இழிவான செயல்களைச் செய்யாதே)

29. இளமையில் கல்
(இளமைப் பருவத்தில் இருந்தே கற்க வேண்டியவற்றை(இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக் கொள்.)

30. அறனை மறவேல்
(தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.)

31. அனந்தல் ஆடேல்
(மிகுதியாகத் துங்காதே.)

32. கடிவது மற
(யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.)

33. காப்பது விரதம்
(தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்(அல்லது) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.)

34. கிழமை பட வாழ்
(உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்.)

35. கீழ்மை யகற்று
(இழிவான குணஞ் செயல்களை நீக்கு.)

36. குணமது கைவிடேல்
(நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்தி விடாதே(கைவிடேல்).)

37. கூடிப் பிரியேல்
(நல்லவரோடு நட்புடன் பழகிப் பின்பு அவரைப் பிரியாதே)

38. கெடுப்ப தொழி
(பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.)

39. கேள்வி முயல்
(கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்.)

40. கைவினை கரவேல்
(உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.)

41. கொள்ளை விரும்பேல்
(பிறர் பொருளைத் திருடுவதற்கு ஆசைப்படாதே.)

42. கோதாட்டு ஒழி
(குற்றமான விளையாட்டை விட்டு விடு.)

43. கௌவை அகற்று
(வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கிடு).

44. சக்கர நெறி நில்
(அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். அரசன் = ஆள்பவர், தலைவர்).

45. சான்றோர் இனத்திரு
(அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.)

46. சித்திரம் பேசேல்
(பொய்யான வார்தைகளை மெய் போல் பேசாதே.)

47. சீர்மை மறவேல்
(புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.)

48. சுளிக்கச் சொல்லேல்
(கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.)

49. செய்வன திருந்தச் செய்
(செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.)

50. சேரிடமறிந்து சேர்
(நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.)

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளி 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பாடல்களை ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் ஐந்து(5) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
  • போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி கோவிந்தராஜூ சுமதி (Mrs Govindaraju Sumathy) அவர்களைத் தொலைபேசி எண்  +65 9106 2232 இலும் திருமதி அழகு தெய்வானை (Mrs Alagu Theivanai) அவர்களைத் தொலைபேசி எண் +65 9183 4161 இலும், avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி. வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிங்கப்பூர்


தொடக்கப்பள்ளி வகுப்பு 3 பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக் கிழமை, 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/231735417169460
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 06 ஆகஸ்ட் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி : தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி

இப்போட்டியில் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை 3 பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

மாணவர்கள் அவர்களது வகுப்புக்கு ஏற்ப, பின்வரும் பகுதியில் தரப்பட்ட ஆத்திசூடிப் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

ஔவையாரின் ஆத்திசூடி

(குறிப்பு: பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)

தொடக்கநிலை வகுப்பு மூன்று (1 முதல் 60 ஆத்திசூடிப்பாடல்கள்)

1. அறம் செய விரும்பு
(நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.)

2. ஆறுவது சினம்
(கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.)

3. இயல்வது கரவேல்
(உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.)

4. ஈவது விலக்கேல்
(ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.)

5. உடையது விளம்பேல்
(உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.)

6. ஊக்கமது கைவிடேல்
(எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது.)

7. எண் எழுத்து இகழேல்
(கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.)

8. ஏற்பது இகழ்ச்சி
(இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.)

9. ஐயம் இட்டு உண்
(யாசிப்பவர்கட்குப் பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.)

10. ஒப்புரவு ஒழுகு
(உலக நடையை அறிந்து கொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்து கொள்.)

11. ஓதுவது ஒழியேல்
(நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக் கொண்டிரு.)

12. ஔவியம் பேசேல்
(ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.)

13. அஃகஞ் சுருக்கேல்
(அதிக இலாபத்துக்காக, தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.)

14. கண்டொன்று சொல்லேல்
(கண்ணாற் கண்டதற்கு மாறாக(பொய் சாட்சி)ச் சொல்லாதே.)

15. ஙப் போல் வளை
('ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயனுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம்.)

16. சனி நீராடு
(சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.)

17. ஞயம்பட உரை
(கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.)

18. இடம்பட வீடு எடேல்
(உன் தேவைக்கு மேல் வீட்டைப் பெரிதாகக் கட்டாதே.)

19. இணக்கம் அறிந்து இணங்கு
(ஒருவரிடம் நட்புக் கொள்ளும் முன், அவர் நல்ல குணங்களும், நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்புக் கொள்ளவும்.)

20. தந்தை தாய்ப் பேண்
(உன் தந்தையையும், தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.)

21. நன்றி மறவேல்
(ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.)

22. பருவத்தே பயிர் செய்
(எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.)

23. மண் பறித்து உண்ணேல்
(பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்காதே என்றும் பொருள் கொள்ளலாம்.)

24. இயல்பு அலாதன செய்யேல்
(நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.)

25. அரவம் ஆட்டேல்
(பாம்புகளைப் பிடித்து விளையாடாதே.)

26. இலவம் பஞ்சில் துயில்
(இலவம் பஞ்சு எனும் ஒரு வகைப் பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.)

27. வஞ்சகம் பேசேல்
(உண்மைக்குப் புறம்பான, கவர்ச்சிகரமான) சொற்களைப் பேசாதே.)

28. அழகு அலாதன செய்யேல்
(இழிவான செயல்களைச் செய்யாதே)

29. இளமையில் கல்
(இளமைப் பருவத்தில் இருந்தே கற்க வேண்டியவற்றை(இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக் கொள்.)

30. அறனை மறவேல்
(தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.)

31. அனந்தல் ஆடேல்
(மிகுதியாகத் துங்காதே.)

32. கடிவது மற
(யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.)

33. காப்பது விரதம்
(தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்(அல்லது) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.)

34. கிழமை பட வாழ்
(உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்.)

35. கீழ்மை யகற்று
(இழிவான குணஞ் செயல்களை நீக்கு.)

36. குணமது கைவிடேல்
(நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்தி விடாதே(கைவிடேல்).)

37. கூடிப் பிரியேல்
(நல்லவரோடு நட்புடன் பழகிப் பின்பு அவரைப் பிரியாதே)

38. கெடுப்ப தொழி
(பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.)

39. கேள்வி முயல்
(கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்.)

40. கைவினை கரவேல்
(உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.)

41. கொள்ளை விரும்பேல்
(பிறர் பொருளைத் திருடுவதற்கு ஆசைப்படாதே.)

42. கோதாட்டு ஒழி
(குற்றமான விளையாட்டை விட்டு விடு.)

43. கௌவை அகற்று
(வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கிடு).

44. சக்கர நெறி நில்
(அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். அரசன் = ஆள்பவர், தலைவர்).

45. சான்றோர் இனத்திரு
(அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.)

46. சித்திரம் பேசேல்
(பொய்யான வார்தைகளை மெய் போல் பேசாதே.)

47. சீர்மை மறவேல்
(புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.)

48. சுளிக்கச் சொல்லேல்
(கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.)

49. செய்வன திருந்தச் செய்
(செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.)

50. சேரிடமறிந்து சேர்
(நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.)

51. சையெனத் திரியேல்
(பெரியோர் வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.)

52. சொற்சோர்வு படேல்
(பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.)

53. சோம்பித் திரியேல்
(முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.)

54. தக்கோன் எனத்திரி
(பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.)

55. தானமது விரும்பு
(யாசிப்பவர்களுக்குத் தானம் செய்.)

56. தீவினை யகற்று
(பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.)

57. துன்பத்திற் கிடங்கொடேல்
(முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.)

58. தூக்கி வினைசெய்
(ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத் தொடங்கவும்.)

59. தேசத்தோ டொத்துவாழ்
(உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.)

60. தையல் சொல் கேளேல்
(மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.)

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளி 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பாடல்களை ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் ஐந்து(5) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
  • போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி கோவிந்தராஜூ சுமதி (Mrs Govindaraju Sumathy) அவர்களைத் தொலைபேசி எண்  +65 9106 2232 இலும் திருமதி அழகு தெய்வானை (Mrs Alagu Theivanai) அவர்களைத் தொலைபேசி எண் +65 9183 4161 இலும், avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி. வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிங்கப்பூர்


தொடக்கப்பள்ளி வகுப்பு 4 பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக் கிழமை, 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/231736244285458
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 06 ஆகஸ்ட் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி : தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி

இப்போட்டியில் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை 4 பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

மாணவர்கள் அவர்களது வகுப்புக்கு ஏற்ப, பின்வரும் பகுதியில் தரப்பட்ட ஆத்திசூடிப் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

ஔவையாரின் ஆத்திசூடி

(குறிப்பு: பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)

தொடக்கநிலை வகுப்பு நான்கு 70 ஆத்திசூடிப் பாடல்கள்

1. அறம் செய விரும்பு
(நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.)

2. ஆறுவது சினம்
(கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.)

3. இயல்வது கரவேல்
(உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.)

4. ஈவது விலக்கேல்
(ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.)

5. உடையது விளம்பேல்
(உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.)

6. ஊக்கமது கைவிடேல்
(எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது.)

7. எண் எழுத்து இகழேல்
(கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.)

8. ஏற்பது இகழ்ச்சி
(இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.)

9. ஐயம் இட்டு உண்
(யாசிப்பவர்கட்குப் பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.)

10. ஒப்புரவு ஒழுகு
(உலக நடையை அறிந்து கொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்து கொள்.)

11. ஓதுவது ஒழியேல்
(நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக் கொண்டிரு.)

12. ஔவியம் பேசேல்
(ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.)

13. அஃகஞ் சுருக்கேல்
(அதிக இலாபத்துக்காக, தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.)

14. கண்டொன்று சொல்லேல்
(கண்ணாற் கண்டதற்கு மாறாக(பொய் சாட்சி)ச் சொல்லாதே.)

15. ஙப் போல் வளை
('ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயனுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம்.)

16. சனி நீராடு
(சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.)

17. ஞயம்பட உரை
(கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.)

18. இடம்பட வீடு எடேல்
(உன் தேவைக்கு மேல் வீட்டைப் பெரிதாகக் கட்டாதே.)

19. இணக்கம் அறிந்து இணங்கு
(ஒருவரிடம் நட்புக் கொள்ளும் முன், அவர் நல்ல குணங்களும், நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்புக் கொள்ளவும்.)

20. தந்தை தாய்ப் பேண்
(உன் தந்தையையும், தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.)

21. நன்றி மறவேல்
(ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.)

22. பருவத்தே பயிர் செய்
(எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.)

23. மண் பறித்து உண்ணேல்
(பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்காதே என்றும் பொருள் கொள்ளலாம்.)

24. இயல்பு அலாதன செய்யேல்
(நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.)

25. அரவம் ஆட்டேல்
(பாம்புகளைப் பிடித்து விளையாடாதே.)

26. இலவம் பஞ்சில் துயில்
(இலவம் பஞ்சு எனும் ஒரு வகைப் பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.)

27. வஞ்சகம் பேசேல்
(உண்மைக்குப் புறம்பான, கவர்ச்சிகரமான) சொற்களைப் பேசாதே.)

28. அழகு அலாதன செய்யேல்
(இழிவான செயல்களைச் செய்யாதே)

29. இளமையில் கல்
(இளமைப் பருவத்தில் இருந்தே கற்க வேண்டியவற்றை(இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக் கொள்.)

30. அறனை மறவேல்
(தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.)

31. அனந்தல் ஆடேல்
(மிகுதியாகத் துங்காதே.)

32. கடிவது மற
(யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.)

33. காப்பது விரதம்
(தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்(அல்லது) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.)

34. கிழமை பட வாழ்
(உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்.)

35. கீழ்மை யகற்று
(இழிவான குணஞ் செயல்களை நீக்கு.)

36. குணமது கைவிடேல்
(நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்தி விடாதே(கைவிடேல்).)

37. கூடிப் பிரியேல்
(நல்லவரோடு நட்புடன் பழகிப் பின்பு அவரைப் பிரியாதே)

38. கெடுப்ப தொழி
(பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.)

39. கேள்வி முயல்
(கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்.)

40. கைவினை கரவேல்
(உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.)

41. கொள்ளை விரும்பேல்
(பிறர் பொருளைத் திருடுவதற்கு ஆசைப்படாதே.)

42. கோதாட்டு ஒழி
(குற்றமான விளையாட்டை விட்டு விடு.)

43. கௌவை அகற்று
(வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கிடு).

44. சக்கர நெறி நில்
(அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். அரசன் = ஆள்பவர், தலைவர்).

45. சான்றோர் இனத்திரு
(அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.)

46. சித்திரம் பேசேல்
(பொய்யான வார்தைகளை மெய் போல் பேசாதே.)

47. சீர்மை மறவேல்
(புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.)

48. சுளிக்கச் சொல்லேல்
(கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.)

49. செய்வன திருந்தச் செய்
(செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.)

50. சேரிடமறிந்து சேர்
(நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.)

51. சையெனத் திரியேல்
(பெரியோர் வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.)

52. சொற்சோர்வு படேல்
(பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.)

53. சோம்பித் திரியேல்
(முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.)

54. தக்கோன் எனத்திரி
(பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.)

55. தானமது விரும்பு
(யாசிப்பவர்களுக்குத் தானம் செய்.)

56. தீவினை யகற்று
(பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.)

57. துன்பத்திற் கிடங்கொடேல்
(முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.)

58. தூக்கி வினைசெய்
(ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத் தொடங்கவும்.)

59. தேசத்தோ டொத்துவாழ்
(உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.)

60. தையல் சொல் கேளேல்
(மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.)

61. தொன்மை மறவேல்
(பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.)

62. தோற்பன தொடரேல்
(ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதைத் தொடங்காதே.)

63. நன்மைக் கடைப்பிடி
(நல்வினை செய்தலை எவ்வளவு இடையூறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.)

64. நாடு ஒப்பன செய்
(நாட்டில் உள்ள பலரும் ஒத்துக் கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.)

65. நிலையிற் பிரியேல்
(உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.)

66. நீர்விளை யாடேல்
(வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.)

67. நுண்மை நுகரேல்
(நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.)

68. நூல்பல கல்
(அறிவை வளர்க்கும் நூல்களைப் படி.)

69. நெற்பயிர் விளை
(நெற்பயிரை விளையச் செய்.)

70. நேர்பட ஒழுகு
(ஒழுக்கம் தவறாமல் நேர்மையான வழியில் வாழ்.)

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளி 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பாடல்களை ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் ஐந்து(5) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
  • போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி கோவிந்தராஜூ சுமதி (Mrs Govindaraju Sumathy) அவர்களைத் தொலைபேசி எண்  +65 9106 2232 இலும் திருமதி அழகு தெய்வானை (Mrs Alagu Theivanai) அவர்களைத் தொலைபேசி எண் +65 9183 4161 இலும், avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி. வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிங்கப்பூர்


தொடக்கப்பள்ளி வகுப்பு 5, 6 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்துஒப்பிக்கும் போட்டி மற்றும் காஹூட் (Kahoot)
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக் கிழமை, 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/231735484866468
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 06 ஆகஸ்ட் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி: தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி மற்றும் காஹூட் (Kahoot)

இப்போட்டியில், தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை ஐந்து, ஆறு வகுப்பில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

மாணவர்கள் அவர்களது வகுப்புக்கு ஏற்ப, பின்வரும் பகுதியில் தரப்பட்ட முதல் 25 கொன்றைவேந்தன் பாடல்வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

ஔவையாரின் கொன்றைவேந்தன்

(குறிப்பு: பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)

தொடக்கநிலை வகுப்பு ஐந்து, ஆறு (25 பாடல்கள்)

கொன்றை வேந்தன் விளக்கவுரை

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
(ஒருவருக்கு தாய் தந்தையரே கண்கண்ட தெய்வம் ஆவர்.)

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
(என்னதான் பக்தி இருந்தாலும் அவரவர் பண்பாட்டின்படி உரிய வழிபாட்டிடத்திற்குச் சென்று (வாரம் ஒருமுறையாவது) இறைவனை வழிபடுவது மிகவும் நல்லது.)

3. இல்லறமல்லது நல்லறமன்று
(இல்லற வாழ்வே எல்லாவற்றிக்கும் மேலான நன்மை பயக்கக் கூடியது.)

4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
(பிறருக்கு உதவி செய்ய மனம் இல்லாதவரின் பொருட்களைத் தீயவர் பறித்துக் கொள்வர்.)

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
(அளந்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்.)

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
(ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் மட்டும் அல்லாது தலைமுறையும் சீர்கெடும்.)

7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
(அறிவியல் அறிவுக்கு ஆதாரமாக இருக்கும் எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நம் இரு கண்கள்.)

8. ஏவா மக்கள் மூவா மருந்து
(ஒரு செயலைச் செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் தேவர்களுக்கும் கிடைக்காத அமிர்தம் போன்றவர்கள்.)

9. ஐயம் புகினும் செய்வன செய்
(பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்.)

10. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
(பொறாமை பேசுவது ஒருவனது வளர்ச்சியை குலைக்கும்.)

11. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
(சிக்கனமாயிருந்து தானியத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.)

12. காவல்தானே பாவையர்க்கு அழகு
(கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு.)

13. கிட்டாதாயின் வெட்டென மற
(நமக்குக் கிடைக்காது என்று தெரிந்ததை மறந்து விடு.)

14. கீழோராயினும் தாழ உரை
(உன்னை விடத் தாழ்ந்தவராயினும் நயமாகப் பேசு.)

15. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
(பிறரின் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், உறவினர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.)

16. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
(பலவானாக இருந்தாலும் கர்வப் பேச்சு கூடாது.)

17. கெடுவது செய்யின் விடுவது கருமம்
(நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை பற்றி யோசிக்காமல் அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்.)

18. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
(வாழ்வில் தாழ்வு வந்த பொழுதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லா உடைமையையும் சேர்க்கும்.)

19. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
(கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்.)

20. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி
(தேவையிருப்பவரைத் தேடிச் சென்று உதவி செய்தலே ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது.)

21. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
(கோள் மூட்டிக் கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது.)

22. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
(எல்லோரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் பகையாளி ஆவான்.)

23. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு
(பெற்றோருக்குப் பெருமை அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே.)

24. சீரைத்தேடின் ஏரைத் தேடு
(புகழோடு வாழ விரும்பினால் பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்.)

25. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
(எந்த நிலையிலும் சொந்தங்கள் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.)

சுற்று இரண்டு

  • Kahoot என்னும் செயலியை கொண்டு நடத்தப்படும் இந்த இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு மாணவர்கள் இணைய இணைப்புடன் கூடிய திறன்பேசியை (Internet connected Smartphone)எடுத்து வர வேண்டும்.
  • இந்தச் சுற்றில் காஹூட் (Kahoot) முறையில் மேலே தரப்பட்ட செய்யுள்கள் தொடர்பான வினாக்கள் தரப்பட்டுச் சரியான விடையைத் தருபவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
  • Kahoot இணைய முகவரி, போட்டிக்கு முன் கொடுக்கப்படும்.
  • போட்டியில் இணைய, ஒரு குறியீட்டு எண் (PIN CODE) திரையில் காண்பிக்கப்படும்.
  • குறியீட்டின் மூலம் காஹூட்டில் இணைந்த பின், போட்டியாளர்கள் தங்கள் பெயரையும் பதிவு எண்ணையும் (Name and Registration number) கொண்டு போட்டியில் இணையலாம் (KKC1-01)
  • ஒவ்வொரு கேள்விகளுக்கும் 20 வினாடிகள் கொடுக்கப்படும்.
  • 20 வினாடிகள் முடிந்த கேள்விகளுக்கு மீண்டும் திரும்பி செல்ல இயலாது.
  • சரியான பதில், தேர்வு செய்ய எடுத்துக்கொண்ட நேரம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  • இரண்டுக்கு மேற்பட்ட மாணவர்கள்களின் மதிப்பெண்களும் நேரமும் ஒன்றாக இருந்தால் மீண்டும் மேலே தரப்பட்ட செய்யுள்கள் தொடர்பான வினாக்கள் தரப்பட்டு, போட்டி நடத்தப்படும்.
  • போட்டி நடைபெறும் போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கலால் போட்டியிலிருந்து வெளியேறினால் , 1 நிமிடத்திற்குள் மீண்டும் போட்டிக்குள் நுழைய வேண்டும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.

இந்தப் போட்டிக்கான நேரம் 15 நிமிடங்கள்

போட்டி ஒன்றுக்கும் இரண்டுக்கும் சேர்த்து ஒருமாணவருக்கு 20 நிமிடங்கள் தரப்படும்

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளி 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பாடல்களை ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் ஐந்து (5) நிமிடங்கள்.
  • காஹூட் (Kahoot) போட்டிக்கான அதிகபட்ச நேரம் பதினைந்து (15) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
  • போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி கோவிந்தராஜூ சுமதி (Mrs Govindaraju Sumathy) அவர்களைத் தொலைபேசி எண்  +65 9106 2232 இலும் திருமதி அழகு தெய்வானை (Mrs Alagu Theivanai) அவர்களைத் தொலைபேசி எண் +65 9183 4161 இலும், avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி. வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிங்கப்பூர்


உயர்நிலைப்பள்ளி 1, 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் படம் வரைந்து வண்ணம் தீட்டும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக் கிழமை, 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/231735904333454
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 06 ஆகஸ்ட் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி 1 : தமிழில் தரப்பட்ட செய்யுள்களைப் படித்து வந்து இரண்டு சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றல்

தெரிவு செய்து தரப்பட்ட ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை ஆகிய பாடல்களைப் படித்து வந்து அவை குறித்த கருத்துகளை வைத்து என் எதிர்காலத்தை நான் எவ்வாறு வடிவமைப்பேன் ? என்ற தலைப்பில் தன்னையும் தன் பணியையும் தன் குடும்பத்தையும் எவ்வாறு வடிவமைத்து வாழப் போகிறார் என்று ஏழு நிமிடங்களுக்குள் பேச வேண்டும்.

ஆத்திசூடி (1 முதல் 10 பாடல்கள்) :

1. அறம் செய விரும்பு
(நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.)

2. ஆறுவது சினம்
(கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.)

3. இயல்வது கரவேல்
(உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.)

4. ஈவது விலக்கேல்
(ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.)

5. உடையது விளம்பேல்
(உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.)

6. ஊக்கமது கைவிடேல்
(எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது.)

7. எண் எழுத்து இகழேல்
(கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.)

8. ஏற்பது இகழ்ச்சி
(இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.)

9. ஐயம் இட்டு உண்
(யாசிப்பவர்கட்குப் பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.)

10. ஒப்புரவு ஒழுகு
(உலக நடையை அறிந்து கொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்து கொள்.)

கொன்றைவேந்தன் :

கொன்றை வேந்தன் விளக்கவுரை

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
(ஒருவருக்கு தாய் தந்தையரே கண்கண்ட தெய்வம் ஆவர்.)

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
(என்னதான் பக்தி இருந்தாலும் அவரவர் பண்பாட்டின்படி உரிய வழிபாட்டிடத்திற்குச் சென்று (வாரம் ஒருமுறையாவது) இறைவனை வழிபடுவது மிகவும் நல்லது.)

3. இல்லறமல்லது நல்லறமன்று
(இல்லற வாழ்வே எல்லாவற்றிக்கும் மேலான நன்மை பயக்கக் கூடியது.)

4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
(பிறருக்கு உதவி செய்ய மனம் இல்லாதவரின் பொருட்களைத் தீயவர் பறித்துக் கொள்வர்.)

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
(அளந்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்.)

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
(ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் மட்டும் அல்லாது தலைமுறையும் சீர்கெடும்.)

7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
(அறிவியல் அறிவுக்கு ஆதாரமாக இருக்கும் எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நம் இரு கண்கள்.)

8. ஏவா மக்கள் மூவா மருந்து
(ஒரு செயலைச் செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் தேவர்களுக்கும் கிடைக்காத அமிர்தம் போன்றவர்கள்.)

9. ஐயம் புகினும் செய்வன செய்
(பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்.)

10. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
(பொறாமை பேசுவது ஒருவனது வளர்ச்சியை குலைக்கும்.)

11. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
(சிக்கனமாயிருந்து தானியத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.)

நல்வழி 5

  1. சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
    இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
    பட்டாங்கில் உள்ள படி.
  2. ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
    ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
    நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
    இல்லை என மாட்டார் இசைந்து.
  3. ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
    இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
    என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
    உன்னோடு வாழ்தல் அரிது.
  4. ஆன முதலில் அதிகம் செலவானால்
    மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
  5. கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
    எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
    இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
    செல்லாது அவன்வாயிற் சொல்.

மூதுரை 5

  1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
    'என்று தருங்கொல்?' எனவேண்டாம் - நின்று
    தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
    தலையாலே தான்தருத லால்.
  2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
    கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
    ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
    நீர் மேல் எழுத்துக்கு நேர்.
  3. அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளாய்
    நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
    சுட்டாலும் வெண்மை தரும்.
  4. அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
    எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
    உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
    பருவத்தால் அன்றிப் பழா.
  5. உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
    பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
    பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
    தளர்ந்து வளையுமோ தான்

போட்டி 2 : படம் வரைந்து வண்ணம் தீட்டுதல்

தரப்பட்ட தொடருக்கான பொருளை வரைந்து வண்ணம் தீட்டுதல், கருத்தை வெளிப்படுத்தும் வகையில் கோட்டு ஓவியமாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலே தரப்பட்ட பாடல்களிலிருந்து தொடர்கள் தெரிவு செய்யப்படும். இந்தப் போட்டிக்கான நேரம் 30 நிமிடங்கள் போட்டி ஒன்றுக்கும் இரண்டுக்கும் சேர்த்து ஒரு மாணவருக்கு 37 நிமிடங்கள் தரப்படும்

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளி 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • பேச்சுப் போட்டிக்கானஅதிகபட்ச நேரம் ஏழு(7) நிமிடங்கள்.
  • வண்ணம் தீட்டுதல் போட்டிக்கான அதிகபட்ச நேரம் முப்பது(30) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
  • போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி கோவிந்தராஜூ சுமதி (Mrs Govindaraju Sumathy) அவர்களைத் தொலைபேசி எண்  +65 9106 2232 இலும் திருமதி அழகு தெய்வானை (Mrs Alagu Theivanai) அவர்களைத் தொலைபேசி எண் +65 9183 4161 இலும், avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி. வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிங்கப்பூர்


உயர்நிலைப்பள்ளி 3, 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான இரண்டு சுற்று கொண்ட கட்டுரை எழுதும் போட்டி மற்றும் காஹூட் (Kahoot) போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக் கிழமை, 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/231736131634451
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 06 ஆகஸ்ட் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி 1 : தமிழில் தரப்பட்ட செய்யுள்களைப் படித்து வந்து இரண்டு சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றல்

தெரிவு செய்து தரப்பட்ட ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை ஆகியபாடல்களைப் படித்து வந்து அவை குறித்த கருத்துகளை இன்றைய இளையரும் ஔவையாரின் கருத்துகளும் என்ற தலைப்பில் 200 சொற்களில் ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

கட்டுரையில் இன்றைய சிங்கப்பூர் இளையர்கள், அவர்களது வாழ்க்கைப் பயணம், அவர்களுக்கு ஔவையாரின் கருத்துகள் எவ்வாறு உதவியாக இருக்கும் அல்லது இருக்காது என்று தங்கள் கருத்துகளை உரிய காரணங்களுடன் எழுத வேண்டும்.

இதற்கு ஒருமணி நேரம் (60 நிமிடங்கள்) தரப்படும்.

ஆத்திசூடி (1 முதல் 10 பாடல்கள்) :

1. அறம் செய விரும்பு
(நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.)

2. ஆறுவது சினம்
(கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.)

3. இயல்வது கரவேல்
(உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.)

4. ஈவது விலக்கேல்
(ஒருவர் மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.)

5. உடையது விளம்பேல்
(உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.)

6. ஊக்கமது கைவிடேல்
(எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது.)

7. எண் எழுத்து இகழேல்
(கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.)

8. ஏற்பது இகழ்ச்சி
(இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.)

9. ஐயம் இட்டு உண்
(யாசிப்பவர்கட்குப் பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.)

10. ஒப்புரவு ஒழுகு
(உலக நடையை அறிந்து கொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்து கொள்.)

கொன்றைவேந்தன் 10:

கொன்றை வேந்தன் விளக்கவுரை

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
(ஒருவருக்கு தாய் தந்தையரே கண்கண்ட தெய்வம் ஆவர்.)

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
(என்னதான் பக்தி இருந்தாலும் அவரவர் பண்பாட்டின்படி உரிய வழிபாட்டிடத்திற்குச் சென்று (வாரம் ஒருமுறையாவது) இறைவனை வழிபடுவது மிகவும் நல்லது.)

3. இல்லறமல்லது நல்லறமன்று
(இல்லற வாழ்வே எல்லாவற்றிக்கும் மேலான நன்மை பயக்கக் கூடியது.)

4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
(பிறருக்கு உதவி செய்ய மனம் இல்லாதவரின் பொருட்களைத் தீயவர் பறித்துக் கொள்வர்.)

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
(அளந்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்.)

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
(ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் மட்டும் அல்லாது தலைமுறையும் சீர்கெடும்.)

7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
(அறிவியல் அறிவுக்கு ஆதாரமாக இருக்கும் எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நம் இரு கண்கள்.)

8. ஏவா மக்கள் மூவா மருந்து
(ஒரு செயலைச் செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் தேவர்களுக்கும் கிடைக்காத அமிர்தம் போன்றவர்கள்.)

9. ஐயம் புகினும் செய்வன செய்
(பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்.)

10. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
(பொறாமை பேசுவது ஒருவனது வளர்ச்சியை குலைக்கும்.)

நல்வழி 5

  1. சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
    இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
    பட்டாங்கில் உள்ள படி.
  2. ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
    ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
    நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
    இல்லை என மாட்டார் இசைந்து.
  3. ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
    இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
    என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
    உன்னோடு வாழ்தல் அரிது.
  4. ஆன முதலில் அதிகம் செலவானால்
    மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
  5. கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
    எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
    இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
    செல்லாது அவன்வாயிற் சொல்.

மூதுரை 5

  1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
    'என்று தருங்கொல்?' எனவேண்டாம் - நின்று
    தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
    தலையாலே தான்தருத லால்.
  2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
    கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
    ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
    நீர் மேல் எழுத்துக்கு நேர்.
  3. அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளாய்
    நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
    சுட்டாலும் வெண்மை தரும்.
  4. அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
    எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
    உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
    பருவத்தால் அன்றிப் பழா.
  5. உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
    பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
    பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
    தளர்ந்து வளையுமோ தான்

சுற்று இரண்டு

  • Kahoot என்னும் செயலியை கொண்டு நடத்தப்படும் இந்த இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு மாணவர்கள் இணைய இணைப்புடன் கூடிய திறன்பேசியை (Internet connected Smartphone) எடுத்து வர வேண்டும்.
  • இந்தச் சுற்றில் காஹூட் (Kahoot) முறையில் மேலே தரப்பட்ட செய்யுள்கள் தொடர்பான வினாக்கள் தரப்பட்டுச் சரியான விடையைத் தருபவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
  • Kahoot இணைய முகவரி, போட்டிக்கு முன் கொடுக்கப்படும்.
  • போட்டியில் இணைய, ஒரு குறியீட்டு எண் (PIN CODE) திரையில் காண்பிக்கப்படும்.
  • குறியீட்டின் மூலம் காஹூட்டில் இணைந்த பின் , போட்டியாளர்கள் தங்கள் பெயரையும் பதிவு எண்ணையும் (Name and Registration number) கொண்டு போட்டியில் இணையலாம் (KKC1-01)
  • ஒவ்வொரு கேள்விக்கும் 20 வினாடிகள் கொடுக்கப்படும்.
  • 20 வினாடிகள் முடிந்த கேள்விகளுக்கு மீண்டும் திரும்பி செல்ல இயலாது.
  • சரியான பதில், தேர்வு செய்ய எடுத்துக்கொண்ட நேரம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  • இரண்டுக்கு மேற்பட்ட மாணவர்கள்களின் மதிப்பெண்களும் நேரமும் ஒன்றாக இருந்தால் மீண்டும் மேலே தரப்பட்ட செய்யுள்கள் தொடர்பான வினாக்கள் தரப்பட்டு, போட்டி நடத்தப்படும்.
  • போட்டி நடைபெறும் போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கலால் போட்டியிலிருந்து வெளியேறினால் , 1 நிமிடத்திற்குள் மீண்டும் போட்டிக்குள் நுழைய வேண்டும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.

இந்தப்போட்டிக்கானநேரம் 20 நிமிடங்கள்

போட்டி ஒன்றுக்கும் இரண்டுக்கும் சேர்த்து ஒரு மாணவருக்கு 80 நிமிடங்கள் தரப்படும்.

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளி 28 ஜூலை 2023 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • கட்டுரை எழுதும் போட்டிக்கான அதிகபட்ச நேரம் அறுபது(60) நிமிடங்கள்.
  • காஹூட் (Kahoot) போட்டிக்கான அதிகபட்ச நேரம் இருபது(20) நிமிடங்கள்
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
  • போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி கோவிந்தராஜூ சுமதி (Mrs Govindaraju Sumathy) அவர்களைத் தொலைபேசி எண்  +65 9106 2232 இலும் திருமதி அழகு தெய்வானை (Mrs Alagu Theivanai) அவர்களைத் தொலைபேசி எண் +65 9183 4161 இலும், avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி. வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
சிங்கப்பூர்

slot deposit pulsa slot Thailand slot dana slot deposit pulsa slot thailand slot pulsa slot dana slot dana slot dana slot777 slot deposit pulsa slot dana slot gacor