72 Bendemeer Road #05-21, Luzerne, Singapore 339941
Tel No: 6295 3258 Fax No: 6225 2004 UEN NO S79SS0032L
Email:
tlcs@ibmc.com.sg Website:
www.tamilmozhi.org
பேச்சுத் தமிழில் கலந்துரையாடல் போட்டி
தொடக்க நிலை 3/4
பேச்சுத் தமிழில் கலந்துரையாடல் போட்டி
- மாணவர்கள் ஔவையாரின் ஏதேனும் ஓர் ஆத்திசூடிப் பாடலை அடிப்படையாகக் கொண்ட ஓர் உரையாடலைத் தயாரித்துத் தனது தோழன் / தோழியுடன் பேச்சுத்தமிழில் கலந்துரையாட வேண்டும்.
- ஒவ்வொரு குழுவிற்கும் 5 நிமிடங்கள் கொடுக்கப்படும்.
- ஒரு குழுவில் இரண்டு மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
ஒரு பள்ளியிலிருந்து இரண்டு குழுக்கள் (நான்கு மாணவர்கள்) மட்டுமே இந்தப் பிரிவில் பங்கு பெறலாம்.
- சரளமாகப் பேசுதல், குரல் ஏற்ற இறக்கம், உச்சரிப்பு, மாணவர் வாழ்க்கைக்கு ஏற்ற பொருத்தமான ஆத்திசூடிப் பாடல் தேர்வு, அதற்கு ஏற்ற பொருத்தமான உரையாடல் தேர்வு, உரையாடலை ஆத்திசூடியோடு இணைக்கும் பாங்கு, கருத்தைப் புரிந்துகொண்டு துணிச்சலுடன் இணையாளரையும் பார்வையாளரையும் பார்த்துப் பேசுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- சென்ற ஆண்டு கலந்துகொண்டு பரிசு பெற்ற மாணவர்களைத் தவிர்த்துப் புதிய மாணவர்களுக்கு வாய்ப்பளித்து ஊக்குவிக்குமாறு ஆசிரியர்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- மேடைப்பொருட்கள் (PROPS) கொண்டு வரவேண்டியதில்லை.
நாள் : 21-07-2019
நேரம் : காலை 8.30 மணி முதல் மதியம் 10.30 மணி வரை [மாணவர்கள் 30
நிமிடங்களுக்கு முன்பே வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்]
இடம் : உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், 2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954
கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாகப் படித்த பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பதிவு செய்யவும்.
விதிமுறைகள்
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப்படிவங்களை 10.07.2019 மாலை 5.00 மணிக்குள் ஏற்பாட்டாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் மறுக்கப்படலாம்.
- 21 ஜூலை 2019, காலை 8.30 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இப்பள்ளி 2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954 என்ற முகவரியில் அமைந்துள்ளது.
- போட்டிகள் நடைபெறும் இடமோ தேதியோ மாற்றப்பட்டால், உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இதற்குத் தங்களது நல்லாதரவையும் புரிந்துணர்வையும் வேண்டுகிறோம்.
- போட்டியாளர்கள் சரியான நேரத்திற்கு வந்து பதிவு செய்யுமாறு அ வர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தாமதமாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம்.
- நடுவர்களின் முடிவுகள் இறுதியானவையாகும்.
- பதிவுக்கட்டணம் எதுவும் கிடையாது.
- போட்டியன்று மாணவர்கள் பள்ளிச் சீருடையில் வரவேண்டும்.
- போட்டியன்று மாணவர்கள் எந்த ஓர் ஆவணமும் எடுத்து வர வேண்டியதில்லை.
- ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பள்ளியிலிருந்து வரும் போட்டியாளர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு உண்டு.
- அனைத்துப் பிரிவுகளுக்கும் போட்டியாளர்களை அனுப்ப வேண்டும் என்ற கட்டாயமில்லை.
- போட்டி நடைபெறும் அறைகளுக்குச் செல்லப் பெற்றோர்களுக்கு அனுமதி கிடையாது.
- கழகத்தால் நியமிக்கப்பட்ட புகைப்படக் கலைஞரைத் தவிர வேறு யாரும் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.
- போட்டிகளுக்கான பதிவு பள்ளிகளின் மூலமாக மட்டுமே ஏற்கப்படும்.
- போட்டிகளின் இறுதி முடிவுகள் பள்ளிகளுக்குத் தெரிவிக்கப்படும்.
- போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் அவர்களது பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
- 11 ஆகஸ்டு 2019 அன்று நடைபெறவிருக்கும் "ஒளவையார் விழா 2019" நிகழ்ச்சியின்போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அந்நிகழ்ச்சி 2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954 என்ற முகவரியில் அமைந்துள்ள உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம்!
- தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு நாங்கள் எடுக்கும் இம்முயற்சி வெற்றி பெறத் தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். மேலும் விவரங்களுக்குத் துணைத்தலைவர் திருமதி லலிதா அவர்களை 90604464 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளவும்.
தொடர்புக்கு: லலிதா: 90604464 | வளர்மதி: 91823424 | சாந்தி: 82079775
PLEASE COMPLETE ALL THE FIELDS IN THE BELOW FORM
IN ENGLISH ONLY